நடக்கும் பாதையின்
தூரம் அறியாமல்
சிரிப்பின் காரணம்
என்ன என்று யோசிக்காமல்
எங்கே போகிறோம்
என்பது கூட தெரியாமல்
அந்த மாலையின்
மழை சாரலில்
உன் கைகளை பிடித்து
கதைகளை பேசிக்
காற்றோடு கரைந்த
நேரங்ளை
நினைத்து பார்க்கையில்
ஏற்படும்
சிலிர்பினை பகிர்ந்து
கொள்வதற்காவது வேண்டும்
“உன் காதல்”
No comments:
Post a Comment