Pages

Monday, 31 August 2015

திருச்சி

என் வாழ்வின் மிக அழகான அத்தியாயங்களை வண்ணங்களால் வார்த்தைகளால் வடிவமைத்து  வாழ்க்கையாகியது திருச்சி
குழந்தை பருவத்தின் இறுதி நிலையாகவும் முழு மனித பருவத்தின் முதல் நிலையாகவுமான கல்லூரி வாழ்க்கை இங்கே அமைய பெற்றது தவமின்றி கிடைத்த வரம்.
திருச்சியில் நான் வாழ வாய்க்கப்பெற்றது ஐந்தே ஆண்டுகள் தான் என்றாலும் அந்த ஐந்து வருடம் என் வாழ்க்கையின் விருப்பப்  பாடம்.
நட்பு,காதல்,ஏமாற்றம்,வெற்றி,நம்பிக்கை,துரோகம்,இன்பம்,தோல்வி,பூரிப்பு,புறகணிப்பு,அவமானம்,அவதானிப்பு என்று இங்கு நான் அனுபவமுற்றது ஏராளம். தனிமையை தவிர்த்து.
அது ஏனோ,தனியாய் நடந்தாலும் தனிமையை உணர்ந்ததில்லை திருச்சியில்.

ஆயிரமாயிரம் நினைவுகள் எங்கு சென்றாலும்.
சொட்டு சொட்டாய் இலையில் இருந்து தரைக்கு வீழும் மழை துளி போல பழைய ஞாபகங்களில் புன்சிரித்துக்கொள்கிறேன் .

இது என் சொந்த ஊர் இல்லை என்றாலும் சொந்தங்களை உருவாக்கி கொடுத்த ஊர் -நட்பின் பெயரால் .
அகண்டு விரிந்த எங்கள் காவிரியின் கரை ஓரத்தில் நின்று நகரின் அழகை ரசிப்பது - வரம்.
கரை(ல)ந்தாலும் இப்பொண்ணி நதியில் கரைந்திட வேண்டும் - தவம் .

திருச்சியின் மீது நான் கொண்டிருக்கும் காதல் அல்லது பற்றானது என் வாழ்கையை மீண்டும் இந்த மலைகோட்டை நகரிலேயே அமைய செய்யும்.எப்போது,எப்படி என்பன மட்டும் தான் நிகழ வேண்டியது .
இவ்வாழ்க்கைகான விருப்பம் என்பது ஓர் ஈர விறகை போல கனத்துவிடுகிறது அதற்கு எளிதில் எரியூட்டி விட முடிவதில்லை.
திருச்சி என் நிறைவு,அமைதி,பெருமை.
அங்கே வாழ்க்கை வாழபட்டது
இங்கோ வாழ்க்கை இயங்கபடுகிறது.

Wednesday, 6 May 2015

நீ எனக்கு கிடைப்பாய் என்ற நம்பிக்கையை விட கிடைக்காமல் போய்விடுவாயோ  என்ற  பயத்தில்  தான் நான்  உன்னை  அதிகம் நேசிகின்றேன்
நீ  எனக்கு  கிடைப்பாயா  கிடைக்கமாட்டாயா என்ற கற்பனைகளுகிடையே வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை நீ  கிடைத்தால்  உன்னிடம்  சொல்வேன்  கிடைக்காவிட்டால்  என் செய்வேன்
மண்ணோடு  சேர்வேன்  

Tuesday, 4 February 2014

விழிகளில் விழுந்து மனதில் முளைக்குமாம்
அனால் நீயோ விரல் வழி புகுந்து
கனவுகளில் வளர்ந்தாய் 
கண்களில் கரையாமல் கை விரல் நகம் தீண்டாமல் 
மெதுவாய் கலந்தாய் என் உயிரில் 
நீ என் நேரத்தை திருடும் போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும் 
அடுத்து
 நீ குறி வைப்பது என் இதயத்திற்கு தான் என்று 
அன்று
உன்னை பார்பதற்காகவே  நேரத்தை நிற்க செய்தேன் 
பின்பு 
உன்னை பார்க்க  நேரம் ஒதுக்கினேன் 
இன்று 
நேரம் கிடைக்கையில் உன்னை பார்த்து கொள்கிறேன் 
புகைப்படங்களில்
.
.
அன்று 
உனக்காக நான் வாழ்ந்தேன் 
பின்பு 
நமக்காக நாம் வாழ்ந்தோம் 
இன்று 
எனக்காக யாரோ வாழ்கிறார்கள் 
மனம் தேற்றி கொள்கிறேன் 
.
.
காலம்  நம்மை கடத்தலாம் 
வாழ்க்கை புதியதாய் தோன்றலாம் 
என்னை கடந்து போய்  விட்டதாகவும்  
உன் கனவுகளை கலைத்து புதிதாய் கனவொன்று தோன்றலாம் 
அனால் 
நாம் விரல் பற்றி ஊர் சுற்றி 
எனக்காக நீ  உனக்காக நான் என்று உண்மையாய் பேசி 
உன் சோகம் என்னுள் புதைத்த நாட்களை எண்ணுகையில் 
உன் விழி ஓரம் ஒரு துளி நீர் கசியும் என்றால் 
நிச்சயமாய் 

என் பெயராவது உன்னுடன் வாழும் உன் மகளின் ரூபத்தில் 

Thursday, 4 July 2013

-------------------

தவமின்றி கிடைத்த வரம்
கேட்காமல் கிடைக்கும்
குழந்தையின் முத்தம் 

குழந்தை

வஞ்சம் இல்லாத கோபம் 
நொடியில் மலரும் சிரிப்பு 
காரணம் அற்ற மகிழ்ச்சி 
சிறு சிணுங்களில் மறையும் ஏமாற்றம் 
அம்மாவின் அணைப்பில் மாறிவிடும் கண்ணீர் 

குழந்தையிடம் வேண்டும் வரங்கள் 

குழந்தை

இன்னைக்கு நான் யாருகிட்டையும் பேச மாட்டேன் 
வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவிடும் குழந்தை